Friday, 22 November 2013

சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பாதுகாப்பு: துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை நியமிக்க உத்தரவு

பெங்களூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் வைத்து, பெண் தாக்கப்பட்டு, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னையிலும் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இதுபோல் கொள்ளைச்சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து, லட்சக்கணக்கில் பணம் கொள்ளைபோனது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில், லட்சக்கணக்கான பணத்துடன், எந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்பட வில்லை. சென்னை ஐஸ்-அவுசில் கூட ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. தற்போது பெங்களூரில் பெண் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதால், சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.


வங்கி ஏ.டி.எம். மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை நியமிக்க வேண்டும். இணையதள தொடர்புடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை, ஏ.டி.எம். மையத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக நிறுவ வேண்டும்.

மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை எடுத்து செல்லும்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் சென்று பார்வையிட்டு, கண்டிப்பாக காவலாளிகளை நியமிக்க வங்கி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோந்து போலீசாரும் அடிக்கடி ஏ.டி.எம். மையம் உள்ள இடங்களில் சென்று கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையில் 4 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும், தமிழகம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜமும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், வங்கி ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலாளிகள் தூங்காமல் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், போலீசார் நேரடியாக சென்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Thursday, 21 November 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

இலங்கையில் நடந்த இறுதி போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்றும், அதனால் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்து கொண்டதும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1994–ம் ஆண்டில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அடிப்படை கட்டமைப்புகளை மீறாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மக்களின் போராட்டங்களுக்கு பிறகும், மத்திய அரசு தமிழகத்தின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவெடுத்தது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

இனி இலங்கை குறித்த வெளியுறவு தொடர்பான விஷயங்களை தமிழ்நாடு அரசு அல்லது தமிழ் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பின்னரே முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருக்கிறோம் என்றும் மனுதாரர் சுந்தரவதனன், மனுவை தாக்கல் செய்த வக்கீல் ராஜாராமன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்னும் இரண்டு வாரங்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Friday, 8 November 2013

இலங்கை சிறையில் உள்ள 86 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி, பிடித்துச் செல்வது பற்றி மிகுந்த மன வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தமிழக மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினைப் பற்றி நான் உங்களுக்கு பல தடவை கடிதங்கள் எழுதியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினர் கேள்வி கேட்பாரின்றி தமிழக மீனவர்களை தாக்கி சித்ரவதை செய்வது தொடர்கிறது. இந்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாகவும், அக்கறை இல்லாத போக்குடனும் இருப்பதால்தான் இலங்கை கடற்படை இப்படி அதிகாரம் கொண்டது போல அத்துமீறி செயல்படுகிறது.

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்க வைக்கும் மற்றொரு நிகழ்வாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 4–11–2013 அன்று ஐஎன்டி–டி.என்.–10 எம்எம்–333, ஐ.என்டி–டி.என்–10– எம்எம்–158, ஐஎன்டி–டிஎன்–10–எம்எம் – 104 ஆகிய 3 எந்திரப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் 5–11–2013 அன்று இலங்கை கடற்படையால் தாக்கி பிடித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அதே தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஐஎன் டி–டிஎன்–08 – எம்எம்–028, ஐஎன்டி–டிஎன்–08– எம் எம்–404, ஐஎன்டி– டிஎன்–08 –எம்எம்–082, ஐஎன்டி– டிஎன்–08 – எம்எம்–318 ஆகிய 4 எந்திரப் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

5–11–2013 தினத்தன்று மட்டும் இந்த 30 தமிழக மீனவர்கள் 7 படகுகளுடன் சட்ட விரோதமாக இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 56 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் இப்படி சட்ட விரோதமாக பிடித்துச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள ஜெயில்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஏழை மீனவர்களின் 35 மீன்பிடி படகுகள் இன்னமும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக மீனவர்களை துன்புறுத்தி, சித்ரவதை செய்து, அவர்களது ஏழ்மையான வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து வரும் இலங்கையின் இந்த நடவடிக்கை மிக, மிக கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இனியும் இந்திய அரசு தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

தாங்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றி உயர்மட்ட தூதரக அளவில் கொண்டு சென்று இலங்கை சிறைகளில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும்.

மேலும் இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும். நீங்கள் இதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Tuesday, 5 November 2013

Novak Djokovic beats Spain's David Ferrer in Paris Masters final

Paris:  Serbia's Novak Djokovic defeated defending champion David Ferrer of Spain 7-5, 7-5 Sunday in the Paris Masters final.

The victory allowed Djokovic, who won the title in Paris in 2009, to keep alive his hopes of edging Spanish star Rafael Nadal for the No. 1 spot in the rankings, with the two players gearing up to end the competition at the season-ending tournament in London.

Ferrer played tough in both sets, but he was unable to pull off the win.

The Spaniard served for both sets but was unable to keep Djokovic from snatching them from him.

Ferrer, who won his first Masters 1000 title in Paris, was trying to become the first player to win consecutive titles since the tournament was created in 1986.

Ferrer, the world No. 4, advanced to the final by upsetting Nadal 6-3, 7-5 Saturday.

All eight Paris Masters quarter finalists will be back in action at the eight-man, season-ending Barclays ATP World Tour Finals, which gets underway in London Monday.

Wednesday, 30 October 2013

Patna blasts accused Imtiyaz remanded in police custody

      Patna, Oct 29 (PTI) Terror suspect Imtiyaz Ansari, arrested while running away from the Patna railway station after a blast in a toilet shortly before Narendra Modi's rally in the city on Sunday, has been remanded in police custody.

    Imtiyaz Ansari, arrested while running away from the Patna railway station after the blast in a toilet on the day of BJP Prime Ministerial candidate

    Narendra Modi's mega rally here on October 27, has been remanded in police custody.

    Ansari, who was produced before Railway Magistrate Arvind Kumar Singh late last night was remanded in seven days police custody.

    Another man Taufim who was seriously injured in the blast in the toilet is in police custody and is being treated at the IGIMS Hospital.

    The two have been charged under sections 18/19/20 of the IPC and relevant provisions of the Railway Act.

    Besides Ansari and Taufim, two others have been detained by the police.

    Six persons were killed and 82 others injured in seven low intensity blasts in and around the venue of Modi's rally at historic Gandhi Maidan in Patna on Sunday shortly before he addressed the huge gathering.

Friday, 13 September 2013

Kolkata: Girl locked in school bathroom dies, angry protesters ransack school

Kolkata: The death of an 11-year-old girl allegedly due to trauma after being locked in the school bathroom by her seniors have sparked angry protests against a Kolkata school.

Protesters on Thursday ransacked the Christ Church school in north Kolkata, breaking computers and furniture while demanding action against school authorities.

This comes after Oindrila Das, a student of class 6 in the school, died on Wednesday, eight days after her seniors locked her in the bathroom for not giving them Rs. 100. They were allegedly helped by the school caretaker. They let Oindrilla out only when school got over.

She fell ill and complained to her parents, after which she was admitted to a nursing home. Oindrila's family says the doctors found nothing physically wrong and released her from the nursing home on Monday.

She had gone into a depression following the ragging incident, her family alleges. Her parents also suspect wrong treatment by a doctor who gave her an injection on Tuesday. When she was taken to hospital, she was declared brought dead.

"She was traumatised in school. That why she fell ill. There is also medical negligence. The doctors didn't treat her properly," her mother Rekha Das alleged. 

Oindrila's parents have filed a police complaint against the school.

"We will take action against the girls who locked her up," said Sharmila Sarkar, the Principal of Christ Church School.

Wednesday, 4 September 2013

Caught on camera: deadly hit-and-run near Mumbai

Navi Mumbai: On security cameras on a road in Navi Mumbai in Thane, 25 kms from Mumbai, a speeding Honda City collides with a van at 11 pm.

The car is going so fast that the van, when hit, spins several times and at least four people are thrown out onto the road. One died and three were injured.

The Navi Mumbai Police has released footage of the hit-and-run nearly a month after it took place on August 6.

The driver of the car, a beauty salon owner named Seema Thakkar, was arrested a day later but was released on bail the same day.

A report to find out whether she was drunk at the time of the accident is still not out.